Monday, April 19, 2010

சகுனம் பார்த்தல்

"எவர் ஒருவருடைய (அவர் பார்த்த) சகுனம் அவருடைய தேவையை (நிறைவேற்றி முடிப்பதை) விட்டும் திருப்பி விடுகிறதோ அவர் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்து விட்டார்" என அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அதனுடைய பரிகாரமென்ன?" என்று (நபித் தோழர்களான) அவர்கள் கேட்டார்கள். அ(தற்கு நபிய)வர்கள் "அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ இல்லா கைருக்க."

(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை உன் சகுனமின்றி வேறு சகுனமில்லை உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறில்லை) 

என நீர் கூறுவதாகும் என்று கூறினார்கள். 

அறிவிப்பாளர்: ஃபள்லு இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: அஹ்மது

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்